தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 5, 2020, 7:10 PM IST

ETV Bharat / state

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி!

திருவண்ணாமலை: பொன்னூர் மலை அருகே தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளதால், அது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அருகே தனியார் கல்லூரியின் வாயிலில் தனியார் வங்கி (கேவிபி) ஏடிஎம் ஒன்று உள்ளது.

இந்நிலையில், இந்த தனியார் வங்கி (கேவிபி) ஏடிஎம்மில் முகமூடி கொள்ளையர்கள் இரும்பு ராடு உடன் பணத்தைக் கொள்ளையடிக்க உள்ளே சென்றனர். அப்போது ஏடிஎம் மையத்தினுள் இருந்த சிசிடிவி கேமராவை அவர்கள் மூடினர். பின்னர் ஏடிஎம்மில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த அலாரம் அடித்ததால் அவர்கள் தப்பிச்சென்றனர்.

சிசிடிவியில் பதிவாகிய காட்சி

இது பற்றி தகவலறிந்த பொன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமராவில் பதிவான முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜஸ்ட் டயல் வலைதளத்தின் மூலம் மோசடி செய்த பெண் கைது!

ABOUT THE AUTHOR

...view details