திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு சொந்தமான வீட்டு மனையில் மாடி வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டின் மாடி மேல் மின்சார கம்பி செல்வதால் வீடு கட்ட முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டார். இந்த நிலையில் மின்சார கம்பியை அகற்றுவதற்கு வெம்பாக்கம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் சென்று புகார் செய்துள்ளார்.
அப்போது உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் என்பவர் இடையூறாக இருக்கும் மின்வயரை அகற்றுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் சக்திவேல் 50,000 கொடுத்துள்ளார். உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் என்பவர் பணம் வாங்கியும் மின் கம்பியை அகற்றாமல் சக்திவேலை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இது சம்பந்தமாக சக்திவேல் பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்ட போது மின் ஒயரை அகற்றுவதற்கு மேலும் 2000 ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சக்திவேல், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகனிடம் புகார் அளித்தார்.