நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாள்கள் தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் விழாவில் அண்ணாமலையார் ஆலயத்தில், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் தீபாராதணை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தின் வெளியே உள்ள 16 கால் மண்டபத்தில் வெள்ளி இந்திர விமானத்தில் அண்ணாமலையார் உள்பட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.