திருவண்ணாமலை மாவட்டத்தில் தலைமைக் காவலராக பணிப்புரிந்து வருபவர் ஸ்ரீபால்(42). இவரது மனைவி ஞானசவுந்தரிக்கும், திருவண்ணாமலை கிளிப்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் சிவக்குமார் என்பவருக்கும் கடந்த சில வருடமாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தெரிந்து கொண்ட காவலர் ஸ்ரீபால், சிவக்குமாரிடம் அடிக்கடி தகராறில் ஈடுப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இது தொடர்பாக ஸ்ரீபால், திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, ஸ்ரீபாலையும், சிவக்குமாரையும் காவல் துறையினர் சமாதானம் செய்துவைத்துள்ளனர்.
இருப்பினும், ஸ்ரீபாலின் மனைவி ஞானசுந்தரிக்கும், சிவக்குமாருக்கும் தொடர்ந்து பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீபால் சிவக்குமாரின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.