திருவண்ணாமலை:ஆரணி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு விழா நடைபெற்றது. அந்த வகையில் கல்லூரி மைதானத்தில் இன்று (ஆக.12) 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி அசைத்து அணிவகுப்பு நடத்தினர்.
ஆரணியில் தேசியக் கொடியுடன் 5,000 மாணவர்கள் பிரம்மாண்ட அணிவகுப்பு - ஆரணி கோட்டாச்சியர்
ஆரணி அருகே தனியார் கல்லூரியில் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓரே இடத்தில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் தேசிய கொடியை அசைத்து அணிவகுப்பு நடத்தினர்
![ஆரணியில் தேசியக் கொடியுடன் 5,000 மாணவர்கள் பிரம்மாண்ட அணிவகுப்பு Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16092961-thumbnail-3x2-nil.jpg)
Etv Bharat
இந்த நிகழ்வில் ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமி கலந்துகொண்டார். சுதந்திர தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தியதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5000 கல்லூரி மாணவர்கள் ஓரே நேரத்தில் தேசிய கொடியை அசைத்து அணிவகுப்பு
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் வரலாற்று சின்னமாக விளங்கும் மணிக்கூண்டிற்கு தேசிய கொடி வர்ணம்
Last Updated : Aug 13, 2022, 4:32 PM IST