தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்- மாவட்ட ஆட்சியர் கந்தசாமி! - 144 தடையை மீறி வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்

திருவண்ணாமலை: 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம், தடையை மீறி வருபவர்களை காவல் துறையினர் கைது செய்வார்கள் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்
செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்

By

Published : Mar 25, 2020, 8:11 AM IST

144 தடை உத்தரவு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,“திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தபட்டவர்கள் ஜியோ டேக் என்ற மொபைல் ஆப் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். மேலும், கரோனா வதந்திகள் பரப்புவோர்கள் கைது செய்யப்படுவார்கள்.

144 தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும். நாளை முதல் 300 அரசுப் பேருந்துகளில் 15 பேர் கொண்ட குழுக்கல் மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளுக்கும் சென்று கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய்’ என்ற திட்டத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வீடு தேடி வந்து அலுவலர்கள் வழங்குவார்கள்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளிநாட்டினர் 26 பேர் திருவண்ணாமலைக்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தனர். அவர்களுக்கு கரோனா குறித்த எந்த பாதிப்பும் இல்லை.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி
ஒரே இடத்தில் கடை வைப்பதைவிட வியாபாரிகள் அந்தந்த பகுதிகளுக்கு வாகனத்தில் கொண்டுசென்று விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி கூறுகையில், “கரோனா வைரஸ் குறித்து முகநூல்களில் தவறான கருத்துக்களை பரப்பினால் அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க வருபவர்கள் அவர்கள் வீட்டில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியவர் மேலும் நியாயமான காரணங்களுக்காக முகக்கவசம் அணிந்து தனியாக செல்லலாம். அனைத்து பொருள்களும் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைக்கும் பொதுமக்கள் முன்கூட்டியே வாங்கி வைக்க வேண்டிய தேவை இல்லை என்று கூறியவர்.


அனுமதிக்கப்பட்ட அரசு வாகனங்கள் மட்டும்தான் இன்று மாலை முதல் அனுமதிக்கப்படும் அவர்களாகவே அரசு வாகனம் என்று போர்டு வைத்துக்கொண்டு வருபவர்கள் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

செய்தியாளர்களை சந்தித்த காவல் துறை கண்காணிப்பாளர்
மருந்தகங்களில் மருத்துவர்களின் ஆலோசனை சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் வழங்கக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பொருள்களை விற்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவை பின்பற்றவில்லை எனில் ஓராண்டு சிறை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details