தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதையில் இருசக்கர வாகனத்தை வழிமறித்து தீயிட்டு கொளுத்திய இளைஞர்கள் - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் : பொன்னேரி அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் சிலர், இருசக்கர வாகனத்தை வழி மறித்து தீயிட்டுக் கொளுத்தினர்.

fire
fire

By

Published : Mar 20, 2021, 7:03 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். பணிக்கு சென்று இரவு வீடு திரும்பிய இவரைகாட்டாவூர் பேருந்து நிலையம் அருகே இளைஞர்கள் சிலர் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். உடனே தனது இரு சக்கர வாகனத்தை அவ்விடத்தில் விட்டு விட்டு யுவராஜ் தப்பியோடினார்.

இரு சக்கர வாகனத்தை வழிமறித்து தீயிட்டு கொளுத்திய இளைஞர்கள்

இந்நிலையில் அவர்கள்இருசக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து யுவராஜ், பொன்னேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அவர்களில் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் கஞ்சா போதையில் இதைச் செய்தது தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details