தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்: மூவருக்கு சிறை! - Youths arrested for celebrate birthday

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மூவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்
பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்

By

Published : Jun 20, 2021, 4:08 PM IST

திருவள்ளூர்: செங்குன்றம் நாரவாரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவர் இருசக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் பணிபுரிந்துவந்தார். இவரது பிறந்தநாள் கடந்த ஜுன் 17ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், அரவிந்தன், பிரவீன் குமார், சம்பா ஆகிய மூவரும் சேர்ந்து புழல் ஏரிக்கரையில் கடந்த ஜுன் 17ஆம் தேதி அரவிந்தனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். மேலும், பட்டாகத்தியில் கேக் வெட்டும் வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்து, பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கத்தியுடன் இருக்கும் உருவப்படத்திற்குப் பால் ஊற்றி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details