தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணி அருகே பைக் மீது கார் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு - திருத்தணி அருகே பைக் மீது கார் மோதி விபத்து

திருத்தணி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

இளைஞர் உயிரிழப்பு
இளைஞர் உயிரிழப்பு

By

Published : Jun 23, 2022, 9:00 PM IST

திருவள்ளூர்:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த மடவிளாகத் தெருவை சேர்ந்தவர் உமாசங்கர் (21). இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புதூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பார்மா கல்லூரியில் கடந்த 2020ஆம் ஆண்டு சேர்ந்துள்ளார்.

பின்னர் கரோனா தொற்று அதிகரித்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் சொந்த மாவட்டத்திற்கு சென்று விட்டார். இதையடுத்து இன்று தனது நண்பரான நசரத்பேட்டையை சேர்ந்த விஜய் (20) உடன் வந்து கல்லூரியில் ஒப்படைத்த டிசியை திருப்பி தறுமாறு கேட்டு விண்ணப்பித்து விட்டு பைக்கில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் நோக்கி சென்றார்.

அப்போது சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார் மோதியதில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த விஜய் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:CCTV:கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details