திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தின் அருகில் உள்ள மின்கம்பத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதை கண்ட அப்பகுதி மக்கள் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ரயில்வே மின்கம்பத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை! - Tiruvallur District News
திருவள்ளூர்: பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
![ரயில்வே மின்கம்பத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை! சதீஷ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8108524-thumbnail-3x2-trl.jpg)
சதீஷ்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர், மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் சதீஷ் என்பது தெரியவந்தது.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர், கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கடன் தொல்லை: இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை