காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுஜித்வேலன் (8) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (ஆகஸ்ட் 4) மாலை வெங்கடேஷ் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச்சென்றுள்ளார்.
அங்கு சுஜித்வேலனை குளிக்க வைத்துவிட்டு கிணற்றின் கரையில் நிறுத்திய பின்பு வெங்கடேஷ் குளித்துக் கொண்டிருந்தார். அப்போழுது எதிர்பாராதவிதமாக சுஜித்வேலன் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்த வெங்கடேஷ், மகனை காப்பாற்ற முயன்றார். அதற்குள் சுஜித்வேலன் கிணற்றில் மூழ்கினார்.