தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன சோதனையின்போது விழுந்த பெண்...! - காவலரின் பைக்கை கொளுத்திய மக்கள் - காவலரின் பைக்கை கொளுத்திய மக்கள்

திருவள்ளூர்: வாகன சோதனையின்போது ஊர்க்காவல்படை வீரர் தடுத்ததில் தவறி விழுந்த பெண் லாரி மோதி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

fire

By

Published : Sep 21, 2019, 8:12 AM IST

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள பாடியநல்லூரைச் சேர்ந்தவர் பிரியா. இவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்ல செங்குன்றம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் காந்தி நகர் காவல்துறை உதவி மையம் அருகே சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அங்கு சோழவரம் காவல் துறையினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊர்க்காவல்படை காவலர் ஒருவர் பிரியாவின் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரியா மீது அவ்வழியாக வந்த லாரி மோதியதில், அவரது கால் ஒடிந்தது. பின்னர் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அப்பகுதி பொதுமக்கள் சோழவரம் காவல் துறையினரின் செயலைக் கண்டித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

காவலரின் இருசக்கர வாகனத்தைக் கொளுத்திய மக்கள்

பிரியாவின் இருசக்கர வாகனத்தை மடக்கி விபத்துக்கு ஆளாக்கிய ஊர்க்காவல்படை வீரரை பொதுமக்கள் அடிக்கப் பாய்ந்தனர். பின்னர் அங்கு நிறுத்திவைத்திருந்த அவரது இருசக்கர வாகனத்தை தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கு சென்ற காவல் துறையினர் திருவள்ளூர் செல்லும் சாலையில் அமர்ந்து காவல் துறையினரை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.

மேலும் படிக்க: சொந்த செலவில் சாலையைச் சீரமைக்கும் போக்குவரத்துக் காவலர்!

ABOUT THE AUTHOR

...view details