திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த எலவம்பேடு கிராம ஏரிக்கரைப் பகுதியில் வசித்து வந்த 52 இருளர் இன மக்களுக்கு, உத்தண்டி கண்டிகை கிராமத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.
இடம் ஒதுக்கியபோது அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தருவதாக அரசு அலுவலர்கள் உறுதியளித்திருந்தனர். அனால் தற்போது வரை குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததால் அம்மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பலமுறை முறையிட்டும் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளவில்லை.