தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணியில் ரூபாய் 54.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் - 54.83 lakhs worth of welfare assistance in Thirunani

திருவள்ளூர்: மக்கள் தொடர்பு முகாமில் 937 பயனாளிகளுக்கு ரூபாய் 54.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்.

திருத்தணி மக்கள் தொடர்பு முகாம்
திருத்தணி மக்கள் தொடர்பு முகாம்

By

Published : Feb 2, 2020, 10:07 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகை ஊராட்சியில் வருவாய்த் துறையின் சார்பில் மக்கள்தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்று அனைத்துத் துறைகளின் சார்பில் மொத்தம் 937 பயனாளிகளுக்கு 54.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கிய இம்முகாமில் திருத்தணி பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன், எம்எல்ஏ நரசிம்மன் வட்டாட்சியர்கள் சுகந்தி, ரேவதி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

திருத்தணி மக்கள் தொடர்பு முகாம்

இதைத்தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான மனுக்களைப் பெற்ற அலுவலர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ நரசிம்மன் அனைத்துத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியைப் பார்வையிட்டு திறந்துவைத்தனர்.


இதையும் படிங்க:

2020 பட்ஜெட் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

ABOUT THE AUTHOR

...view details