தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 29, 2020, 5:08 PM IST

ETV Bharat / state

இறைச்சி வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

திருவள்ளூர்: திருவெள்ளைவாயல் கிராம மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக இறைச்சி கடைகளிள் குவிந்துவருகின்றனர்.

thiruvallur
thiruvallur

கரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் சுய தனிமைப்படுத்துதல், அதிக எண்ணிக்கையில் கூடுதலை தவிர்த்தல் உள்ளிட்டவற்றைப் பின்பற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை காவல்துறையினர் கண்டித்தும், வழங்குகள் பதிந்தும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

சமூக இடைவெளியை மீறும் மக்கள்

அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த திருவெள்ளைவாயல் கிராம மக்கள், இறைச்சி வாங்குவதற்காக பொது இடங்களில் அதிகளவில் குவிந்துவருகின்றனர்.

சமூக இடைவெளியை பின்பற்றாமல் நூறுக்கும் மேற்பட்டவர்கள் இறைச்சி கடைகளில் குவிந்து காணப்படுவது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஒரே சமயத்தில் பொதுமக்கள் கூடியதால் நான்கு ஊராட்சி மன்றங்கள் சார்பில் விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details