விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு மின்சார சம்மேளனத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதன் மாநிலப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "மின்சார வாரியத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மின்சார வாரியம் ஊதியம் கொடுத்து, அவர்களை நிரந்தர ஊழியர்களாகப் பணியமர்த்த வேண்டும். மேலும் 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாகத் தொழிற்சங்கங்களுடன் பேசித் தீர்வுகாண வேண்டும். மின்சார வாரியத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.