திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை அடுத்த பாடியநல்லூரில் லாரி ஓட்டுநரான வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று (ஆகஸ்ட் 6) பிற்பகல் அவரது வீட்டின் கதவை சிலர் தட்டியுள்ளனர்.
இதையடுத்து வெங்கடேசன் சென்று கதவை திறந்தபோது, வீட்டுக்குள் அடையாளம் தெரியாத கும்பல் உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் நகைகளை பறித்து தப்பிச் சென்றுள்ளது.