தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு - தமிழ் விபத்து செய்திகள்

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

two-wheeler-collision-with-van-two-fatalities
two-wheeler-collision-with-van-two-fatalities

By

Published : Feb 8, 2021, 6:51 AM IST

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த பெரிய முல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (45). இவர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில் (36) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மீஞ்சூரிலிருந்து செங்குன்றம் செல்லும் நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் பெரிய முல்லைவாயில் மேம்பாலம் அருகே, எதிரே வந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த மீஞ்சூர் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வேன் ஓட்டுநரைக் கைதுசெய்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு: மற்றொரு இளைஞர் உயிருடன் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details