தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 15, 2020, 10:14 PM IST

ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருத்தணி அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இருசக்கர வாகன விபத்து
இருசக்கர வாகன விபத்து

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாழவேடு காலனியைச் சேர்ந்த சம்பத், முருகேசன் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
ஆந்திரா மாநிலம் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்த போது சத்திரஞ்ஜெயபுரம் பகுதியில், இரண்டு இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில் முனுசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பத், முருகேசன் இருவரும் பலத்த காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருத்தணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த முனுசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details