திருவள்ளூர் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (56). இவர் கடந்த 26ஆம் தேதியன்று தனது வீட்டருகேவுள்ள கடைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரது கழுத்திலிருந்த இரண்டரை பவுன் தங்க நகையைப் பறித்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, கடந்த 27ஆம் தேதி மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணிடம், இதேபோல அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்திலிருந்த எட்டரை பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
நகையைப் பறிகொடுத்த இருவரும் இதுபற்றி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து அருகில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளைக் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.