திருவள்ளூரில் அமுமுகவின் ஒன்றிய நிர்வாகியின் மகன் திருமண நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, சிதம்பரம் கைது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
தவறு யார் செய்தாலும் தண்டனைதான் - டிடிவி. தினகரன்
திருவள்ளூர்: தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுப்பதுதான் சரியான முடிவு என்று டிடிவி. தினகரன் தெரிவித்தார்.
ttv dinakaran
இதற்கு பதில் அளித்த அவர், ’தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்பது சரியான முடிவுதான். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுப்பது சரியான முடிவு. தனிப்பட்ட முறையில் யார் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்றார்.