பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி, பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்த ஒத்திகை முகாம் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையிலுள்ள பனிமலர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் அனைத்து துறைகளின் சார்பில் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. பேரிடர் காலங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டவர்களை கயிறுகள் மூலம் எவ்வாறு மீட்டு அவருக்கு முதலுதவி அளிப்பது குறித்ததான விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. இதில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தப் பயிற்சியில் இயற்கை இடர்பாடுகள் வரும்போது, மீட்புக்குழுவினர் வருவதற்கு முன் நாம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.