தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் தட்டுப்பாட்டால் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டுப்போட்ட மக்கள்! - குடிநீர் தட்டுப்பாடு

திருவள்ளூர்: குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குப் பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர்.

ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்ட பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

By

Published : Oct 2, 2019, 11:04 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ராமாபுரம் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கிராமத்தில் குடிநீருக்கு கடந்த ஐந்து மாதங்களாக கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஊராட்சி அலுவலகத்திற்குப் பூட்டுப் போட்ட பொதுமக்கள்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காந்தி ஜெயந்தியான இன்று ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்கள் மீது கோபப்பட்ட நிதிஷ் குமார்!

ABOUT THE AUTHOR

...view details