தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்கள் பேருந்து, ரயிலில் சாகசம் செய்தால்: இனி வழக்குப்பதிவு - மாணவர்கள் பேருந்து, ரயிலில் சாகசம் செய்தால்

மாணவர்கள் பேருந்து, ரயிலில் சாகசம் செய்தால் இனி வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் எனத் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனி வழக்குப் பதிவு
இனி வழக்குப் பதிவு

By

Published : Dec 9, 2021, 10:17 AM IST

திருவள்ளூர்மெய்யூர் பகுதியில் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது தொடர்ந்து.

அத்தகைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது பெரியபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (டிச.7) அவர்களின் பெற்றோரை வரவைத்து காவல்துறையினர் அறிவுரை கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இனி வழக்குப்பதிவு

ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர், மாணவி ஓடும் ரயிலில் ஆபத்தை உணராமல் சாகசம் மேற்கொண்ட வீடியோ வைரலாகி அந்த நிலையில் அந்த மாணவர்கள் பெற்றோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் மேலும் இத்தகைய செயலில் மாணவர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மாணவர்கள் பேருந்து, ரயிலில் சாகசம் செய்தால் கைது

ஓடும் பேருந்தில் படிக்கட்டில்

இந்த, எச்சரிக்கையை மீறியும் திருவள்ளூர் மாவட்டத்தில் மெய்யூர் மற்றும் பொன்னேரி பகுதியில் பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்தில் படிக்கட்டில் நின்றவாறு மேற்கூரையில் தொங்கியவாறு சாகசம் செய்யும் வீடியோ கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன. அத்தகைய மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை செய்தும் அறிவுரை கூறியும் அனுப்பிவைத்தனர்.

பாஸ்போர்ட் எடுக்கவோ தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்

மேலும், மாணவர்கள் இத்தகைய செயலில் இனி ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் எனவும், அத்தகைய மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு அரசு வேலைக்குச் சேரவோ வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்கவோ தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பேருந்து, ரயிலில் சாகசம் செய்தால்

மாணவர்கள் வைத்திருந்த நீளமான பட்டாக்கத்தி

இந்நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கத் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த 8 இளைஞர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் நீளமான பட்டாக்கத்தி வைத்திருந்ததைப் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில் அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களின் எதிர்காலம் கருதிக் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

இதையும் படிங்க: Watch Video: ரயிலுடன் ரன்னிங் ரேஸ் - மாணவியின் விபரீத விளையாட்டு!

ABOUT THE AUTHOR

...view details