திருவள்ளூர்: கடந்த சில மாதங்களாக கணிசமாக குறைந்து வந்த கரோனா தொற்று, கடந்த ஒரு வாரமாக வேகமாகப் பரவி வருகிறது.
சில நூறு எண்ணிக்கையில் இருந்த பரவல், தற்போது ஆயிரமாக உயர்ந்து வருவதால், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு அங்கமாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் ஆர்வலர்கள், தற்போது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூரின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், ஏழைகளின் சுற்றுலாத் தலமாகவும் விளங்குவது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.
இந்த நீர்த்தேக்கத்தில் ஆண்டுதோறும் சுற்றுலா ஆர்வலர்கள் குடும்பத்துடன் வந்து விளையாடி மகிழ்ச்சியாக பொழுதைப் போக்கிச் செல்வது வழக்கம்.