தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூவிருந்தவல்லியில் தீவிர துப்புரவு முகாம்! 5 டன் குப்பைகள் அகற்றம்! - பூவிருந்தவல்லியில் தீவிர துப்புரவு முகாம்

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி நகராட்சியில் தீவிர துப்புரவு முகாம் நடத்தப்பட்டதில் சுமார் 5 டன் அளவிலான குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன.

tiruvallur poonamalle mass cleaning

By

Published : Nov 25, 2019, 11:23 AM IST

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், மழைக்காலங்களில் மழை நீர் தங்குதடையின்றி செல்லவும் பூவிருந்தவல்லி நகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக வாரம் ஒரு நாள் ஒரு வட்டத்தில், தீவிரத் துப்புரவு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த நேரத்தில் நேற்று பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட ஆறாவது வட்டத்தில் தீவிர துப்புரவு முகாம் நடைபெற்றது. இதில் 21 வார்டுகளில் பல்வேறு பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளைச் சரி செய்து குப்பைகளை அகற்றுதல், தேங்கியுள்ள மழை நீரை அகற்றி பிளீச்சிங் பொடி இடுதல், மருத்துவ முகாம் மற்றும் நில வேம்பு குடிநீர் உள்ளிட்டவை வழங்குதல் போன்றவை செயல்படுத்தப்பட்டது.

குட்கா வழக்கில் முன்னாள் டிஜிபிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேலும், ஒரே நாளில் சுமார் 5 டன் அளவில் குப்பைகள், கால்வாய் கழிவுகள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது. இதில் நகராட்சி ஆணையர் டிட்டோ மற்றும் சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் இருந்தனர்.

பூவிருந்தவல்லியில் தீவிர துப்புரவு முகாம்

ABOUT THE AUTHOR

...view details