சென்னை மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு சூறைக்காற்று வீசிவருவதால், 15 அடி உயரத்திற்கு அலைகள் எழுவதால் உப்பங்கழி ஏரியில் நீர்வரத்து அதிகரித்துவருகிறது.
இதன் காரணமாக படகுத்துறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு படகுகள் தண்ணீரில் அடித்துச் சென்றதால் மீனவர்கள் தங்கள் படகுகளை அங்கிருந்து கயிறு மூலம் கட்டி பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவைத்துள்ளனர்.