கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் முழு மூச்சோடு செயல்படுகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தினக்கூலி, மாத ஊதியம் பெறும் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் நிவாரணம் வழங்கி வருகின்றன. அதில் ஒரு அங்கமாக ஈக்காடு பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. திருச்சபையின் சார்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.