தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 28, 2019, 1:01 PM IST

Updated : Nov 28, 2019, 4:27 PM IST

ETV Bharat / state

சவ ஊர்வலத்தில் இளைஞர் வெட்டிப்படுகொலை!

திருவள்ளூர்: சவ ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்
Tiruvallur murder

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (வயது 23). தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மனோஜ் வேலையை விட்டு நின்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை வெள்ளவேடு பகுதியில் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற சவ ஊர்வலத்தில் மனோஜ் நடனமாடியபடி சென்றபோது இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்த பிறகு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்ற நிலையில் மர்ம நபர்கள் மனோஜின் தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இளைஞர் வெட்டி படுகொலை

இதுகுறித்து தகவலறிந்த வெள்ளவேடு காவல் துறையினர் படுகொலை செய்யப்பட்ட மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.

சவ ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என வெள்ளவேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

Last Updated : Nov 28, 2019, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details