திருவள்ளூர்: திருத்தணி மாருதி நகரில் வசித்து வந்தவர் சஞ்சீவ் ரெட்டி (65). இவர் தனது மனைவி மாலாவுடன் வசித்து வந்தார். திருத்தணி பகுதியில் ஏலச்சீட்டு, பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது தங்கை மகன் ரஞ்சித் குமார் (28).
இவரிடம் சஞ்சீவ் ரெட்டி அன்பு காட்டிவந்தார். இந்நிலையில், திருத்தணியில் ஸ்வீட் கடைகள் நடத்தி வரும் ரஞ்சித்குமாரின் வியாபாரத்திற்கு சஞ்சீவ் ரெட்டி பண உதவி செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த 29ஆம் தேதி முதல் சஞ்சீவ் ரெட்டியின் செல்போன் ஸ்விச் ஆப் ஆனதால் பட்டாபிராமபுரத்தில் வசிக்கும் அவரது தம்பி பாலு சஞ்சீவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு பூட்டியிருந்த நிலையில் பீரோ திறக்கப்பட்டு பொருள்கள் சிதறிக்கிடந்தன.
இதனால் சந்தேகமடைந்த அவர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் காணாமல்போன சஞ்சீவையும் அவரது மனையியையும் தேடி வந்தனர்.
சஞ்சீவ்வின் செல்போன் சிக்னல் கடைசியாக சித்தூர் மாவட்டத்தில் காட்டியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர், செல்போனில் அவர் கடைசியாக பேசிய ரஞ்சித்குமாரை பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர். இதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின.