தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 20, 2019, 10:44 PM IST

ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் தொழிலாளர்கள் போராட்டம்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலை முன்பு 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

hundai workers protest

காஞ்புரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வந்த சோவல், டாங்சன் தொழிற்சாலைகள் அண்மையில் மூடப்பட்டன. ஹுண்டாய் தொழிற்சாலைக்கு கார் உதிரிபாகங்கள் தயாரித்து வந்த இந்த தொழிற்சாலையில், 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

ஆனால், தொழிற்சாலை மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் தங்களை பணியமர்த்தக்கோரி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹூண்டாய் தொழிலாளர்கள் போராட்டம்

தொடர்ந்து, தொழிற்சாலை முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக பணியை திரும்ப பெற்றுத்தர ஆவணம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details