தமிழ்நாடு

tamil nadu

வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படவில்லை - என்ன ஆனது 20 சவரன் நகைகள்?

திருவள்ளூர்: வங்கி மேலாளர் வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படாமல் 20 சவரன் நகைகள் காணமால் போயிருப்பது காவல் துறையினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Nov 8, 2019, 11:55 PM IST

Published : Nov 8, 2019, 11:55 PM IST

ETV Bharat / state

வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படவில்லை - என்ன ஆனது 20 சவரன் நகைகள்?

thiruvalluvar bank manager house robbery mystrey

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் அருகே திருமலைவாசன் நகரிலுள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிணி. இவர் சென்னை தியாகராய நகரிலுள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது கணவர் வெங்கடேசனும் நேற்று காலை வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுள்ளனர்.

பின்னர் வேலை முடித்துவிட்டு இருவரும் இரவு வீடு திரும்பியுள்ளனர். பூட்டிய வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது,
வீட்டின் அலமாரியில் இருந்த 20 சவரன் தங்கநகை மட்டும் காணமால் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வங்கி மேலாளர் குடியிருந்த குடியிருப்பு

இது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பீரோ உடைக்கப்படாமல் நகைகள் திருடு போயிருப்பதால், வீட்டில் உள்ளவர்களே நகைகளை எடுத்துக்கொண்டு நாடகமாடி வருகின்றனரா என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: வாடிக்கையாளர் போல் நடித்து நூதன திருட்டு - வெளியான சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details