தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 28, 2019, 8:37 AM IST

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் திமுகவிற்கு சவுக்கடி - ஜெகன் மூர்த்தி

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி திமுகவிற்கு சவுக்கடி கொடுத்துள்ளது என அதிமுக கூட்டணி கட்சியான புரட்சிபாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

புரட்சிபாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி
புரட்சிபாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் நேமம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டரசன் பேட்டையில் உள்ள வாக்கு சாவடியில் அதிமுக கூட்டணிக் கட்சியான புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நிச்சயம் அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், திமுக தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டுமென இந்த நொடிவரை போராடிவருகிறது. ஆனால் முதலமைச்சர் பழனிசாமி அரசு நீதிமன்றம் வரை சென்று வெற்றிபெற்று இந்த தேர்தலை நடத்தியதன் மூலம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புரட்சிபாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி

இதையும் படியுங்க: 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' - உறுதிமொழி ஏற்று வாக்களித்த இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details