தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 24, 2020, 11:43 PM IST

ETV Bharat / state

பிரபல ரவுடி மர்மமான முறையில் வெட்டிப் படுகொலை!

திருவள்ளூர்: பிரபல ரவுடி மர்மமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் பிரபல ரவுடி கொலை பிரபல ரவுடி கொலை ரவுடி கொலை Rowdy Murder Thiruvallur Rowdy Murder Thiruvallur Murder
Thiruvallur Rowdy Murder

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்தன். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆனந்தன் தனது வீட்டின் பின்புறம் கழுத்து, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.

இதைக் கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து வெள்ளவேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆனந்தன்

முன்னதாக ஆனந்தன் அப்பகுதியைச் சேர்ந்த அனைவரிடமும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததுள்ளது. மேலும் அவர் திடீரென கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கழுத்து அறுக்கப்பட்டு இளைஞர் கொலை

ABOUT THE AUTHOR

...view details