தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, தொகுதிவாரியாக அரசியல் கட்சியினர் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஏகே.மூர்த்தி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து, திருத்தணியில் இன்று முதல் கூட்டணிக் கட்சிகளின் பரப்புரை தொடங்கியது.
முன்னதாக, திருத்தணியில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்துவிட்டு, கொண்டமாபுரம் பகுதியிலிருந்து வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பரப்புரையை தொடங்கினார். இதில், கூட்டணி கட்சியான தேமுதிக கட்சியின் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து அவர் வேட்பாளரிடம் நேரடியாகவே கேட்டார்.