தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீ விபத்தில் ஏழு குடிசைகள் எரிந்து நாசம்! - திருவள்ளூர் தற்போதைய செய்தி

திருவள்ளூர்: மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் அருகருகே இருந்த எழு குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

Hut fire accident thiruvallur
Hut fire accident thiruvallur

By

Published : Feb 11, 2020, 12:02 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள கீழசேரியில் மின் கசிவினால் தீடீரென்று அங்குள்ள குடிசைகளில் தீ பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ மளமளவென்று அருகிலிருந்த மற்ற ஆறு குடிசைகளுக்கும் பரவியது.

தகவலறிந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்புத்துறை வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த துணிகள், வீட்டு உபயோக பொருள்கள், நகை, பணம் உள்ளிட்ட பல பொருள்கள் எரிந்து நாசமாகின.

தீ விபத்தில் ஏழு குடிசைகள் எரிந்து நாசம்!

இந்தத் தீ விபத்து குறித்து மப்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:குடும்ப பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியேறிய தந்தை, மகன் சடலமாக மீட்பு

ABOUT THE AUTHOR

...view details