தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரதநாட்டியப்பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது! - சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர்: பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடனப்பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

thiruvallur dance teacher arrested under the pocso act

By

Published : Nov 6, 2019, 10:36 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவில் பதாகை, கிறிஸ்து காலனி அன்னை தெரசா மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ரவிசர்மா என்ற பலசுப்பிரமணியம்(53). கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனது வீட்டில் பரத நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.

இவர் தனது பள்ளியில் படித்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பரதநாட்டியப்பள்ளியை சிறுமியின் பெற்றோர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு முற்றுகையிட்டு ரவிசர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இச்சம்பவமறிந்து வந்த காவலர்கள், பொதுமக்களின் பிடியிலிருந்து ரவிசர்மாவை மீட்டுக் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இந்தச்சூழலில் சிறுமியின் பெற்றோர் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரனிடம் இன்று காலை புகார் அளித்தனர்.

கைது செய்யப்பட்ட நடனப்பள்ளி ஆசிரியர்

அந்தப் புகார் மனுவை ஆவடி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிய அவர், புகாரின் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன் பின்னர் ரவிசர்மாவிடம் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். பின்னர் ரவிசர்மாவை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஆழ்துளையில் விழும் குழந்தைகளை மீட்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details