தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 7, 2020, 10:27 PM IST

ETV Bharat / state

திருவள்ளூரில் இரண்டு கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: இரண்டு கோயில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

உண்டியல் பணம் திருட்டு
உண்டியல் பணம் திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இன்று (டிச.7) காலை வழக்கம்போல் கோயில் நடையை திறக்க பூசாரி வந்தார்.

அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த அவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல் துறையினர் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

உண்டியல் பணம் திருட்டு

அதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கோயிலுக்குள் சென்று உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. அதேபோல் சிங்கிலிமேடு அருகேயுள்ள பாளையத்தம்மன் கோயில் உண்டியலை உடைத்து அதே நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உண்டியல் பணம் திருட்டு: சிசிடிவி வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details