திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் மது பாட்டில்கள் திருடப்பட்டதாக திருவள்ளூர் தாலுகா காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
மதுபானங்களைத் திருடி விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் கைது! - வேலை பார்த்த கடையிலேயே திருடிய டாஸ்மாக் ஊழியர்கள்
திருவள்ளூர்: மதுபானங்களைத் திருடி விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த ஊழியர்கள் கடையிலேயே திருடியது அம்பலம்
அப்போது கடையில் வேலை பார்த்த ஊழியர்களே மதுபான பாட்டில்களை திருடியது தெரியவந்துள்ளது மேலும் கடையின் விற்பனையாளர்கள் செந்தில் குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் மதுபானங்களைத் திடுடி பார் உரிமையாளர் தானு என்பவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த ஊழியர்கள் கடையிலேயே திருடியது அம்பலம்
இதனைத் தொடர்ந்து அந்த 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், 20 கேஸ் பீர் பாட்டில் இரண்டு கேஸ் குவாட்டர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.