தமிழ்நாடு

tamil nadu

தச்சூர் டு சித்தூர் 6 வழிப்பாதை: நிலம் கையப்படுத்துவதற்கு எதிர்ப்பு

தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையிலான 126 கி.மீ. தூரத்திற்கு ஆறு வழிப்பாதை அமைப்பதற்காக நிலம் கையப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Jul 31, 2021, 4:13 PM IST

Published : Jul 31, 2021, 4:13 PM IST

நிலம் கையப்படுத்துவதற்கு எதிர்ப்பு
நிலம் கையப்படுத்துவதற்கு எதிர்ப்பு

திருவள்ளூர்: தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறு வழிப்பாதை அமைக்க அரசு, நிலத்தைக் கையப்படுத்திவருகிறது. குறிப்பாக, ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான தும்பாக்கம், பருத்திமேனி குப்பம், பேரண்டுர், பனப்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நஞ்சை நிலத்தைக் கையகப்படுத்தப்படுகிறது.

ஆனால் மாற்றுப்பாதையில் விவசாயத்தை அழிக்காமல் அரசின் தரிசு நிலம் உள்ளிட்டவை வழியாக ஆறு வழிப்பாதைத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என விவசாயிகள் கோரிக்கைவைக்கின்றனர்.

இன்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், விவசாயிகளின் நில ஆவணங்களை எடுத்துவரக் கூறியதாகவும், ஆனால், அந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகவும் கூறி ஊத்துக்கோட்டை வட்ட நஞ்சை நில விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலத்தைக் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்தும், மாற்றுப்பாதையில் திட்டத்தைச் செயல்படுத்தவும் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details