தமிழ்நாடு

tamil nadu

கும்மிடிப்பூண்டியில் 1507 மாணவர்களுக்கு மிதிவண்டி

By

Published : Feb 26, 2020, 7:58 PM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து 507 மாணவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

கும்முடிபூண்டி அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்வு
கும்முடிபூண்டி அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் கலந்துகொண்டு பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 16 மாணவர்கள், தேசிய அளவில் சிலம்பாட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மாணவர் லோகேஷ் ஆகியோரைப் பள்ளி சார்பில் பாராட்டி பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.

கும்மிடிப்பூண்டி அரசுப் பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்வு

இதனையடுத்து 1507 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆர்.எம்.கே. கல்வி நிறுவனம் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் தாக்கம்: பங்குச்சந்தை மீண்டும் சரிவு

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details