திருவள்ளூர் மாவட்டம் ஆவடி லாசர் நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் பிரேம் கோபால் (54). ஐ.சி.எஃப். காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார். இவரது மனைவி புனிதவதி திருவேற்காட்டிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று (டிச. 15) பிரேம்கோபாலுக்குத் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆட்டோ ஆவடி சி.டி.எச். சாலை, பேருந்து நிலையம் அருகே சென்றபோது பிரேம்கோபால் மயங்கி விழுந்துள்ளார்.