தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2021, 10:19 PM IST

ETV Bharat / state

கரோனா தொற்று பரவலைத் தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்கள்!

கரோனா தொற்று பரவாமல் இருக்க திருவள்ளூர், திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

கரோனா தொற்று பரவாமல் இருக்க சிறப்பு மருத்துவ முகாம்
கரோனா தொற்று பரவாமல் இருக்க சிறப்பு மருத்துவ முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக, கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி போடும் சிறப்பு மருத்துவ அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் உள்ள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமினை
மாவட்ட ஆட்சியர், ம.ப.சிவன்அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதேபோல, வாணியம்பாடி நகராட்சி நிர்வாகமும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைந்து நடத்திய இலவசத் தடுப்பூசி முகாமில் சுமார் 600-க்கும் அதிகமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இங்கு, சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்தனர்.

தெற்கு ரயில்வேயின், சேலம் பிரிவு தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்தியது. இந்த முகாமினை, சேலம் நகர முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்துதலைமை மருத்துவ கண்காணிப்பாளர் எம்.நரசிம்மன் ஏற்பாடு செய்திருந்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் மற்றும் சேலம் பிரிவின் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர், ஏ.அண்ணாதுரை ஆகியோர் முகாமினை பார்வையிட்டனர். இந்த முகாமில் ரயில்வே ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2021: சென்னை அணி பந்துவீச்சு

ABOUT THE AUTHOR

...view details