தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 22, 2021, 12:15 PM IST

ETV Bharat / state

மெழுகுவர்த்தியால் நேர்ந்த சோகம்: தந்தையைக் கொன்ற மகன்

வெங்கத்தூர் கிராமத்தில் மெழுகுவர்த்தி கொண்டுவர கூறிய தந்தையை, மகனே கொலைசெய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையை கொலை செய்த மகன்
தந்தையை கொலை செய்த மகன்

திருவள்ளூர்: வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணன் (50). இவரது மகன் பாண்டியன் (28) மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டுவந்துள்ளனர்.

சிகிச்சை கொடுத்தும் குணமாகவில்லை என்பதால் இவருக்குத் திருமணம் செய்துவைக்காமல், வீட்டில் வைத்துப் பெற்றோர் கவனித்துவருகின்றனர். இந்நிலையில் நேற்று (நவம்பர் 21) பாலகிருஷ்ணனின் மனைவி உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில் தந்தையும், மகனும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது தொடர் மழை பெய்ததன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டது. இதனையடுத்து பாலகிருஷ்ணன் பாண்டியனிடம் மெழுகுவர்த்தி கொண்டுவருமாறு கூறியுள்ளார். அதனை செய்ய மறுத்த காரணத்தினால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் வீட்டிலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து பாலகிருஷ்ணனை நடு மண்டையில் சரமாரியாகத் தாக்கியதோடு, கத்தியால் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 2 பெண்களிடம் தாலிச் சங்கிலி பறிப்பு: பாய்கிறது குண்டர் சட்டம்?

ABOUT THE AUTHOR

...view details