தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிப்காட் தொழிற்பேட்டையில் சைலேந்திர பாபு நேரில் ஆய்வு - ShailendraBabu Press Meet

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் ரயில்வே துறை தலைவர் சைலேந்திர பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

திருவள்ளுர் சைலேந்திரபாபு ஆய்வு சிப்காட் தொழிற்பேட்டையில் சைலேந்திர பாபு ஆய்வு சைலேந்திர பாபு பத்திரிக்கை சந்திப்பு Thiruvallur ShailendraBabu Inspection ShailendraBabu Press Meet
ShailendraBabu Press Meet

By

Published : Jan 5, 2020, 11:49 AM IST


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் ரயில்வே துறை தலைவர் சைலேந்திர பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அப்போது, தீயணைப்பு உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் தீயணைப்புத் துறையில் உள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்தும் தீயணைப்பு துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அதன்பின் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் சென்மேரிஸ் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து தேர்வினை எதிர்கொள்ள அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு வர உள்ளதால் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை.

சைலேந்திர பாபு பத்திரிக்கை சந்திப்பு

அது விரும்பி வரவேற்கக் கூடிய நல்ல காரியம் திருவிழா போன்றது; நல்ல அனுபவத்தை கொடுக்கும். 100 நாள்களில் மாணவர்கள் படிப்பில் கவனம், ஆர்வம் செலுத்தினால் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

யோகி பாபுவின் ‘பன்னி குட்டி’ டீசர் விரைவில்...

ABOUT THE AUTHOR

...view details