தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 6, 2023, 10:26 AM IST

ETV Bharat / state

கடல் அரிப்பு.. பாலைவனமாக மாறிய பழவேற்காடு சாலை..

கடல் அரிப்பு காரணமாக பாலைவனமாக மாறிய பழவேற்காடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலைவனமாக மாறிய பழவேற்காடு சாலை
பாலைவனமாக மாறிய பழவேற்காடு சாலை

பாலைவனமாக மாறிய பழவேற்காடு சாலை

திருவள்ளூர்: பழவேற்காட்டில் அண்மையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் உப்பங்கழி ஏரியை கடந்து கடல்நீரானது லைட் ஹவுஸ், துறைமுகம் இடையே செல்லும் ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை மூழ்கடித்தது. இதில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த பின்னர் கடல் நீரானது உள்வாங்கி இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும், கடல் நீருடன் அடித்து வரப்பட்ட மணலானது சாலை முழுவதும் பரவி உள்ளது. இதனால் துறைமுகச்சாலை பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் இருசக்கர ஊர்திகள் மணல் திட்டில் சிக்கிக் கொள்வதால் வாகனத்தை இயக்க முடியாமல் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தள்ளிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே சாலையில் ஆக்கிரமித்துள்ள கடல் மண் தீட்டுகளை உடனடியாக அகற்றி சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: என்ஐஏ வெளியிட்ட அதிர்ச்சிகரமான புள்ளி விவரம்!

ABOUT THE AUTHOR

...view details