தமிழ்நாடு

tamil nadu

திருத்தணியில் ஒப்புகைச்சீட்டு முறையில் மாதிரி வாக்குப்பதிவு

By

Published : Mar 30, 2021, 6:16 PM IST

திருவள்ளூர்: திருத்தணி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தப்பட்டு ஒப்புகைச் சீட்டு முறையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

மாதிரி வாக்குப் பதிவை ஆய்வு செய்த ஆட்சியர்
மாதிரி வாக்குப் பதிவை ஆய்வு செய்த ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனை ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

திருத்தணி தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

விருப்பப்பட்ட வாக்காளருக்கு நாம் செலுத்தும் வாக்கை விவிபேட் இயந்திரம் மூலம் உறுதிப்படுத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் மொத்தமுள்ள 399 வாக்கு மையங்களுக்கும், வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் அனுப்பிவைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க:உலக பைபோலார் டிசார்டர் தினம், மன அழுத்தம் முக்கியக் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details