திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கிவரும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம், திருப்பாச்சூர் அருகே தனியார் விடுதிகளில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
அந்த விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் உள்ளிட்ட உபாதைகளினால் அவதிப்பட்டு சுமார் 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுத் திரும்பினார்.
துரைமுருகன் பேசிய 14 நிமிட வீடியோ
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்டு ஊழியர்கள் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் குழுக்களில் வதந்தி பரவியதை அடுத்து திருவள்ளூர் புதுச்சத்திரம் திருப்பாச்சூர், காஞ்சிபுரம் மாவட்ட சாலைகளை மறித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், அதில் ஒன்பது பெண் ஊழியர்கள் இறந்துவிட்டதாகவும் இதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஊடகங்களும் உண்மையான செய்தியையும் வெளியிடவில்லை எனத் தனது சாட்டை யூ-ட்யூப் வலைதளத்தில் துரைமுருகன் பேசிய 14 நிமிட வீடியோ வெளியிட்டிருந்தார்.