தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 29, 2021, 9:47 AM IST

ETV Bharat / state

சோழவரம் அருகே ரவுடி கொலை - இருவர் சரண்

சோழவரம் அருகே ரவுடி ஒருவர் நேற்று (ஜூலை 28) கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

ரவுடி கொலை  சோழவரம் அருகே ரவுடி ஒருவர் கொலை  திருவள்ளூர் சோழவரம் அருகே ரவுடி ஒருவர் கொலை  கொலை  கொலை வழக்கு  குற்றச் செய்திகள்  திருவள்ளூர் செய்திகள்  thiruvallur news  thiruvallur latest news  thiruvallur rowdy murder issue  rowdy murder issue  rowdy murder  Rowdy was killed near Cholavaram  thiruvallur Cholavaram rowdy murder issue  crime news
ரவுடி கொலை

திருவள்ளூர்: சோழவரம் அடுத்த நல்லூரில் முட்புதரில் ரத்த காயங்களுடன் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக நேற்று (ஜூலை 28) சோழவரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அவ்விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சண்முகப்பாண்டியன் என்பதும், அவர் மீது காவல் நிலையங்களின் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட இளைஞர்

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சண்முகப்பாண்டியனின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கொலை தொடர்பாக மணிகண்டன், முருகன் ஆகியோர் சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொழில் போட்டியால் கொலை நடந்ததா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டி கொலை - 6 சவரன் நகை கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details