தமிழ்நாடு

tamil nadu

புழல் சிறை கைதி மரணம் - போலீஸ் விசாரணை

By

Published : Jul 24, 2022, 10:25 PM IST

திருவள்ளூர் புழல் மத்திய சிறையில் நில மோசடி வழக்கில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறையில் இருந்த கைதி உயிரிழப்பு
சிறையில் இருந்த கைதி உயிரிழப்பு

சென்னை புழல் மத்திய சிறையில் காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த தரணி ராஜன் என்கின்ற பாண்டியன் (52) என்பவர் அடைக்கப்பட்டிருந்தார். இவர் நில மோசடி வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற காவலில் கடந்த 22 ஆம் தேதி சிறைக்கு கொண்டு வரப்பட்ட விசாரணை கைதி.

அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து வெளியே வந்தபோது படிக்கட்டில் கால் இடறி விழுந்ததில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவசர ஊர்தி மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாண்டியன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் புழல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கலவரம்: செல்போன் விவரங்கள் சிபிசிஐடி போலீசார் சேகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details